நூலாசிரியர் அக்ஷயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையன், கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் மற்றும் கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களும் கலந்துகொண்டனர்.
எளிமையாக நடைபெற்ற நூல்வெளியீட்டு நிகழ்வில் கல்வி நிலைய ஆலோசகர், திட்டமிடல் இணைப்பாளர் ஆகியோரினால் நூல்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நூலாசிரியர் அக்ஷயன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலானது உயர்தர மாணவர்களுக்குரியதாகக் காணப்படுகின்ற அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கான வளிமண்டலவியல் தொடர்பான அறிமுகத்தையும் வழங்குகின்றது.