அதற்கமைவாக ஆரம்ப அரையாண்டிற்கான திறனாய்வு அறிக்கை வழங்கும் நிகழ்வு கல்விநிலையத்தில் 25.05.2012 (வெள்ளிக்கிழமை)அன்று பி.ப. 5.00 மணியளவில் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
திறனாய்வு அறிக்கை வழங்கும் நிகழ்வில் இதுவரை காலம் இடம்பெற்ற 06 மாதாந்தப் பரீட்சைகளுக்குமான மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தரம் 9, 10 மாணவர்களுக்கான திறனாய்வு அறிக்கையும், தரம் 11 மாணவர்களுக்கு விசேடமாகச் செயற்படுத்தப்படும் ஓயாத பரீட்சை எனும் முதல் 10 பரீட்சைகளின் மொத்தப்புள்ளிகளினடிப்படையிலும் திறனாய்வு அறிக்கைகள் வழங்கப்பட்டன.
அரையாண்டுக்கான திறனாய்வு அறிக்கை வழங்கும் இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர். திரு.சி.தில்லையம்பலம் அவர்களும், கல்வி நிலையத்தின் கலாசார இணைப்பாளராக அண்மையில் பொறுப்பேற்ற திரு. சி.கோபால் அவர்களும் கலந்துகொண்டு திறனாய்வு அறிக்கைகளை வழங்கி வைத்ததுடன், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேறுவதற்குரிய சில உபாயங்களையும் எடுத்துக்கூறினார்கள்.