நிகழ்வில்
சூழல்தினம் சம்பந்தமான விழிப்புணர்வு உரை மற்றும் கவிதைகள்
வாசிக்கப்பட்டதுடன், தரம் 10 - 13 வரையிலான மாணவர்களுக்கு வினாவிடைப்
போட்டியும் நடைபெற்றது.
நிகழ்வில்
கலந்துகொண்ட அணியினருக்கான பரிசில்களை கல்வி நிலைய திட்டமிடலாளர் க.சிவா
அவர்கள் வழங்கி வைத்தார். நிகழ்வுகளுக்குரிய ஏற்பாடுகளை புவியியல் வினாவிடை
ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.